Posts

Showing posts from September, 2018

பாரி வள்ளல்

Image
பாரி வள்ளல் பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி. வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக்  காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது 'பிரான்மலை' என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய பாண்டிய அரசின் எல்லையின் அருகில் வரும். இதற்கு இன்னொரு பெயர் 'கொடுங்குன்றம்' என்பதாகும். பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர். இவர் கடையேழு வள்ளல்களில்  ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர்  பாரியி...

மலையமான் திருமுடிக்காரி 2

Image
மலையமான் ஆட்சி மொழி தமிழ் குலப்பெயர் மலையமான் தலைநகரம் திருக்கோயிலூர் மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும். அதில் மலையமான் திருமுடிக்காரி  என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன். இவனை கோவற் கோமான் என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதால் இவன் கோவலர் குடியை சேர்ந்தவன் என்பது தெளிவாகிறது.மேலும் கல்வெட்டில் இவர்கள் யது வம்ச யாதவர்கள் என்றும் பதிவு செய்து உள்ளார்கள்.இவர்கள் திரு கோவலர் ஊரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள் திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார். நண்பரின்...

மலையமான் திருமுடிக்காரி

Image
காரி கடையெழு வள்ளல்களுள்  ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின்  தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார். காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார்  ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா...

தண் நிழல் வாழ் நற் குடி.....

Image
சோழமண்டல சதகம் கூறும் உடையார் குலமும் சேதிராயர் இனமும்.   ................................................................................................................................................................... உடையார் குலத்தில் பலவகையும் உயர்வே ளாளர் பலவகையும் குடையார் குலத்தில் பலவகையும் கோனார் குலத்தில் பலவகையும் அடைய வாயில் உடையாராய்& அளகே சனைப்போல் அருங்கடலின் மடையார் செல்வம் பெரிதாக வளம்சேர் சோழ மண்டலமே 30 உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர். மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில் அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும் உடையான் சரராமன் ஊர் என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர். ................................................................................................................. வள்ளல் குலத்தோராக கம்பன் கூறு...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-5

Image
மறவர்களுக்கும் பார்க்கவ மலையமான் குலத்தவருக்குமான இன ஒற்றுமைகள்: சேதுபதி(செம்பியன்) மன்னர்களும் சிவகங்கை(கௌரி வல்லபர்) மன்னர்களும் பார்க்கவ குலத்தாரைப் போல் உடையார்தேவர் என்று பட்டம் உடையவர்கள் .இந்த பட்டம் எந்த வேறு குலத்தாரிடமும் கிடையாது.பாரி ஆண்ட பிரான்மலையை ஆண்ட அழகன் குமரன் நம்பிராஜன் உடையநயினார்(வீர கேரளன்) பட்டம் உடையவர். பண்டாரத்தார்: பண்டாரத்தார் பட்டம் பார்க்கவ குல உடையாரிடம் உண்டு. சேத்தூர் ஜமீன்-சேவுக பாண்டியத்தேவரும்,கொல்லம்கொண்டான் ஜமீன்-வாண்டாய தேவரும் "வணங்காமுடி பண்டாற மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள். அணஞ்சான்: பார்க்கவ குலத்தாரிடம் அணஞ்சான் பட்டம் உண்டு: (எ-டு)நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி       இது போன்று  சொக்கம்பட்டி ஜமீன் - "செம்புலி" சின்ன அணைஞ்சா தேவர் என்ற பட்டம் உடையவர். மறவர்குலத்தவரான அழகு முத்து சேர்வையின் முன்னோராக "உத்தம சோழ கோன் மிலாடுடையார்" என்ற பட்டம் உடையவர். தம் முன்னோரின் பட்டமான சோழ கோன் தான் அழகு முத்து கோனாக மருவியுள்ளது. பார்க்கவ குலத்தில் உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னர் இ...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-4

சேலம் கல்வெட்டு: சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில் பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு. முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான். என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது பார்க்கவ குலத்தாருக்கும் கள்ளர்,மறவர் இனத்திற்குமான ஒற்றுமை ஆதாரங்கள்: கள்ளர்களுக்கும் பார்க்கவகுல சகோதர கூறுகள்: இன்றைய பார்க்கவ குலத்தவர்கள் தஞ்சை கள்ளர்களின் உட்பிரிவினரே என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.ஆனால் பார்க்கவர்கள் தனித்தே இயங்கு கின்றனர். பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்று ஆய்வுகள் இவர்களைக் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார், பார்கவ குல ...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-3

Image
மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டுகள் ஆதாரம். மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது........... திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி: "'மிலாடான ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப் பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள் எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வர்மர். சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு." திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவ...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-2

Image
இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். . கரிகாலச்சோழன் காலத்திலிருந்தே மலையமானும் சோழனும் உறவினர் ஆவார்கள்: . உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது,என்று கூறுபவர்கள் உணரட்டும்,கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு மழவராயர் மகள்.ம...

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் 1

Image
பார்க்கவ குல உடையார்கள். (மலையமான் நத்தமான்,சுருதிமான்,உடையார்,நயினார், மூப்பனார்) (பார்க்கவ குலம்) காரி வழிமுறையும் காசினியில் வேளிர் வேள்பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர். ---கபிலர் மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-2 மாட்சி மிகு சேர மலையரின் நேரடி வழித்தோன்றல்கள் யார்? மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலச...

பார்க்கவகுல வேளிர்

Image
பார்க்கவ கோத்திரத்து வேளிர்கள். வேளிர் யார் என்ற கேள்விக்கு விடையாக குறிஞ்சிக் கோமான் கபிலர் அவர்கள் இருங்கோவேள் என்ற வேளிர் குல அரசனை நோக்கி பாடிய பாடல் ஒன்று விடை கூறும்.பாடல் இது தான்... நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை யாண்டு நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல், தாரணி யானைச் சேட்டிருங் கோவே! ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் யான் தர இவரைக் கொண்மதி; வான்கவித்து இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல் பொன் படு மால் வரைக் கிழவ, வென் வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடல் அருங் குரைய நாடு கிழவோயே! பாடலின் பொருளாக அறிஞர்கள் கூறுவது. வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்...

பார்க்கவகுல வரலாற்று பதிவுகள்

Image
வன்னிய குலத்திலும் பார்கவ குலத்திலும் ஒரே பட்டம் கொண்ட குடும்பத்தார் சிலர் உள்ளனர் என்பதை விளக்குகிறது 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிருஷ்ணாபுரம் செப்பேடு.இதன் மூலம் பார்கவ குலத்தார் வன்னியப்பட்டமும் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. சுருதிமான் மூப்பனார்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்) என்ற மெய்க்காப்பாளர் பட்டம் பெற்றவர்கள் இவர்கள் ராஜராஜனின் காந்தளூர் சாலைப்படை எடுப்பின் போது அவரோடு கேரளம் சென்று போரிட்டவர்கள். காந்தளூர் சாலையை வேரறுத்த ராஜராஜன் மீண்டும் அங்கு கேரளர்கள் தலை தூக்காதவாறு அடக்கி வைக்க இவர்களை அங்கு இருக்குமாறு வைத்து விட்டு தஞ்சைக்கு வந்துள்ளார். அவ்வாறு அங்கே குடியேறிய பார்கவ குல மலையமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று  அழைப்பதைக் காணலாம். சுருதிமான்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான்,வாணகோவரையன்,வாணரா...

பார்க்கவகுல வரலாற்று பதிப்பு

Image
சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்க்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி. க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம். இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர். சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடும் மண உறவு கொண்டுள்ளனர். பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன், என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர்க்குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழனது படை பலமாக,காவலாக விளங்கியவர்கள் மலையமான்கள் மட்டுமே. மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவர், திருமுடிக்காரியின் மைந்தர்கள்  இருவருள் ஒருவர். இவர் சோழனின் சேனாதிபதியாக பொறுப்பேற்றவர். முள்ளூர் மலையை ஆண்டவர். சோழ மன்னன் பகை மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு இவருடைய முள்ளூர் மலை...

பார்க்கவகுலம்

Image
பார்க்கவ குல உடையார்கள். (மலையமான் நத்தமான்,சுருதிமான்,உடையார்,நயினார், மூப்பனார்) (பார்க்கவ குலம்) காரி வழிமுறையும் காசினியில் வேளிர் வேள்பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர். ---கபிலர் பார்க்கவ குல சத்திரியர்கள் (உடையார்,மூப்பனார்,நயினார்) காரி வழிமுறையும் காசினியில் வேளிர்,வேள் பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர்.--முது கபிலர். கோவற் கோமான் மலையமான் வம்சமாக ஆதாரப்பூர்வமாக வாலிகண்டபுரம் கல்வெட்டு ,வரஞ்சுரபுரம் கல்வெட்டு மேலும் திருச்செங்கோட்டில் ஐம்பது கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்,16,17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரூர் கல்வெட்டுகள் முதல் திருக்கோவிலூர் வீரட்டானம் கல்வெட்டு,உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு வரை உறுதிசெய்யப்பட்டு அறியப்படுவோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக  திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் நரசிங்க உடையான் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்...

பார்க்கவகுல வரலாறு

Image
பண்டைய காலச் செய்திகளைப் பார்ககும் போது வேந்தர்களுக்கு அடுத்ததாக சொல்லப்படும் குறு நில மன்னர்கள் வரிசையில் உள்ள வேளிர் சமூகத்தை சேர்ந்த கடையேழு வள்ளலகளில் ஒருவரான பாரி மகள்களுக்கும் மலையமானுக்கும் உண்டான வழித் தோன்றல்கள் என்று கல்வெட்டுகள்,பாடல்கள்,செப்பேடுகள் போன்ற வரலாற்று சான்றுகள் உள்ளன.கொங்குவேட்டுவ மறவர்(மழவர்),சேதியர்,மலாடர்(மலைநாடர்) என்ற இனக்குழுவைச் சேர்ந்த இவர்கள் மலையமான்,நத்தமான்,சுருதிமான் (உடையார்,நயினார்,மூப்பனார்)என்ற பட்டம் கொண்டவர்கள்.இவர்களில் மலையமான்,சுருதிமான் ஆகிய பட்டம் கொண்ட மக்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் சிறப்பாக நயினார் பட்டம் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.நத்தமான்,மலையமான் பட்டம் கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் உடையார்கள் என்று வழங்கப்படுவார்கள்.சுருதிமான் பட்டம் உடையோர் பொதுவாக மூப்பனார் என்றும் அழைக்கப்படுவர்.எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய குலங்கள் என்ற நூலில் உடையார் சமூகம் என்று(உடையார்,நயினார்,மூப்பனார்) இம்மூவரையும் குறிப்பிட்டுள்ளார். வேளிர் சமூகமாகிய இவர்களின் மூதாதையர் ஆகிய மலையமான்களே திருக்கோவலூர்ப் பகுதியை ஆட்சி செய்தவர்கள்.  நன்றி அதிபதி வி...

பார்க்கவகுல வரலாறு

Image
வேந்தர் குலப்பெருமைபடி வாழ்ந்து தமிழருக்கு பெயர் சேர்க்க!  சுருதிமான் says: 19 January 2012 17:20 Reply பார்கவ குலமென்பது முக்குலத்தில் ஓர் குலமான கள்ளர்குல பிரிவின் தொன்மையான சோழ நாட்டு அரசவம்சத்தவர்களில் ஓர் குழுவினரின் பட்டமாகும். ,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,சேதிராயர்கள் முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள். சேதிநாடுஎன்றநடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர், மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக சுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும் குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள் என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன. இக்குழுவினர் தங்களை கல்வெட்டுக்களில் பார்கவ குல சத்ரியர்கள் என்றே பதிவு செய்துள்ளனர்.அவர்களின் வம்சத்தினரும் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் சோழனுக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு மேன்மையும்,தகுதியும் பெற்றவர்களாகஇருந்தனர். சோழர்...

பார்க்கவகுல வரலாற்று பதிவுகள்

Image
பார்க்கவ குல மூப்பனார் என்னும் சுருதிமான்களின் கல்வெட்டுகளும் வரலாறும். அரியலூர் மாவட்டம்-பெரம்பலூரில் கி.பி 1226 இல் எழுதியுள்ள சுருதிமான் பற்றிய கல்வெட்டு செய்தி. அரியலூர் மாவட்டம்,பெரம்பலூர் வட்டம்,கொளக்காநத்தம் ஊரில் குமரவேல் ஆசிரியர் வீட்டுப் படிக்கல் காலம் - கி.பி. 1226 மூன்றாம் இராஜராஜன்-ஆட்சியாண்டு.10 காலத்தையக் கல்வெட்டு ..ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜதேவற்கு யாண்டு10வது இத் தாம்பு செய்வித்தான் ஊற்றதூருடையான் சுருதிமான் சனனாதர் அரைய தேவநான வாண விச்சாதிர நாடாழ்வான். சுருதிமான் என்பது மலையமானின் வம்சம். ஊட்டத்தூர் என்பது திருச்சிக்கு அருகில் உள்ளது.சுருதிமான்கள் ஆதியிலிருந்தே தஞ்சையிலிருந்து..திருச்சி வரைக்கும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கும் இவ்விடங்களில் சுருதிமான்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தும் வருகின்றனர்.தமிழக ஜாதிப்பட்டியலில் பார்க்கவ குலத்தைத் தவிர எவருக்கும் சுருதிமான் மலையமான் நத்தமான் பட்டங்களும் கிடையாது. மூப்பனார் என்ற பட்டம் கொண்டோரெல்லாம் சுருதிமான்களும் அல்ல. மேலே காணும் கல்வெட்டு பட்டவர்த்தனமாக சுருதிமான் என்ற இனப்பெயரையே கொண்டுள்ளது. பார்க்கவ குல மூப்பனார...

பார்க்கவகுல வரலாற்று சுவடுகள்

Image
சேரமான் பெருமாள் குலசேகரஆழ்வார் அவர்களின் நேரடி வம்சமுமாக மூப்பனார் சுருதிமான் என்றும் அறியப்பட்டவர்கள்.மலையர்,வானவர்,வில்லவர் என்று சேரனுக்கான பட்டங்களைஉடையவர்கள்.,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள்.சேரனின் வம்சமானதால் அக்னி குல க்ஷத்ரியராகவும்,சோழனின் கிளை வம்சமானதால் ஆதித்த குல க்ஷத்ரியர்களாகவும்,வேளிர்களே குடி வேந்தர் என்ற முறையில் யது குல க்ஷத்திரியர்களாகவும் பாண்டியனோடு அநேக மணஉறவுகளின் மூலமாக சந்திரவம்சமாகவும் மூவேந்தரோடும் தொடர்பும் இரத்த பந்தமும் உள்ள அரச வம்சமானவர்கள் பார்கவகுலத்தோர். சேதிநாடுஎன்ற நடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர்,மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம்வருடங்களுக்கும் மேலாகசுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும் குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள் என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன. இக்குழுவினர் தங்களை கல்வெட்டுக்களி...

பார்க்கவகுல வரலாறு

Image
பார்க்கவகுலம் என்ற சமூக இனக் குழு மக்களைப்பற்றிய பண்டையச் செய்திகளில் பார்க்கும் போது வேந்தர்களுக்கு அடுத்ததாக குறு நில மன்னர்களின் வரலாறு சொல்லப்படுகிறது. வரலாற்றுத்தொகுப்பு இந்த குறு நில மன்னர்களில் மலையமானின் இனமாக அறியப்படுபவர்கள் பார்க்கவ குலத்தவர்கள். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மகள்களுக்கும் மலையமானுக்கும் உண்டான வழித் தோன்றல்கள் என்று கல்வெட்டுகள், பாடல்கள், செப்பேடுகள் போன்ற வரலாற்று சான்றுகள் உள்ளன. மறவர்(மழவர்), சேதியர், மலாடர்(மலைநாடர்) என்ற இனக்குழுவைச் சேர்ந்த இவர்கள் உடையார் சமூகம் எனப்படுவர். பட்டம்தொகு உடையார் சாதியினரான இவர்களை வடதமிழகத்தில் குறிப்பாக கடலூர்போன்ற பகுதிகளில் நயினார் எனவும், தஞ்சை, திருச்சியிலிருந்துதென்பகுதிகளில் மூப்பனார் எனவும், திருக்கோவிலூர் போன்ற நடுநாட்டுப்பகுதிகளிலும், தெற்கே சில இடங்களிலும் உடையார் என்று அழைக்கப்படுகின்றனர். உடையார்கள் மலையமான், நத்தமான், சுருதிமான் (உடையார்,நயினார்,மூப்பனார்) என்ற பட்டம் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களில் நத்தமான் பட்டம் கொண்ட மக்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் நயினார் பட்டம் கொண்டு அழைக்கப்படுகின்...